கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, October 21, 2023

சரஸ்வதி பூஜை - கலைவாணி போற்றி - தமிழ்க் கவிதை

சகலகலா வல்லித்தாயே 
கீழ்ப்பால் ஒருவனும் 
மேற் பாலாகிடத் 
தாய்ப் பாலாவது உனதருளம்மா...                         
ஊமைக் குழந்தையும் 
மேகக் கவியென மிளிர்வதும் 
நீ தரு ஞானப்பாலம்மா.... 
கடையனுக்கும் நீயருள்வாய் 
கடைத்தேற்றம் கலைமகளே!  
தலைமகள் என்று உன் 
தாமரைப் பாதம் 
தலை சூடி என் மனம் போற்றும்...
அறிவுலகில் நடை போட 
நீ தரும் செல்வமே 
அழகு மணிமுடி 
மண்கண்ட பிற செல்வம் எல்லாம் 
காலைக் கதிர் கண்டு 
மறையும் பனித்துளி...
நீ எம்மைப் பூட்டிய 
விலங்கைப் பொடித்தாய் 
பொன்னுலகக் கதவைத் திறந்தாய் 
தாயே எல்லாம் தந்தது உனதாசி 
நீயே உலகின் மகராசி 
வெள்ளைத் தாமரை உறைபவளே 
என் உள்ளத்தாமரை அமர்வாயே...
பீடுடைய பெருவாழ்வு தரும் 
ஏடுடைய மலராளே!- 
நின் இரு பாதமலர் போற்றி! போற்றி!🙏🙏

 - கவிஞர் சுரேஷ் இராமலிங்கம், காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive