கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 24, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இராவண காவியம், நாச்சியார் திருமொழி

  9th Tamil Model Notes of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

30-10-2023 முதல் 03-11-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

கலை பல வளர்த்தல் – கவிதைப்பேழை.

5.உட்பாடத்தலைப்பு

இராவண காவியம், நாச்சியார் திருமொழி.

6.பக்கஎண்

157 - 162

7.கற்றல் விளைவுகள்

T-9027 இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்.

T-9028 பொருள் உணர்ந்து பிரித்துப் படித்தல் வாயிலாகப் பக்தி இலக்கியச் சொற்கூறுகளையும் பொருள் வெளிப்பாட்டினையும் அறிந்து பயன்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

புதியன சிந்தித்துக் கவிதை படைத்தல்.

9.நுண்திறன்கள்

பக்தி இலக்கியப் பாடல்களை உணர்ச்சியுடன் பாடுதலை அறிதல்.

ஐவகை நிலங்களின் அழகை எழுதுதல்.

பெண்பாற் புலவர்கள் இறைவனை நாயகனாக எண்ணி எழுதிய பாடல்களைப் படித்துச் சுவைத்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_75.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_0.html

https://tamilthugal.blogspot.com/2022/02/9-6-9th-tamil-online-test-ravana.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer-unit-6-ravana.html

https://tamilthugal.blogspot.com/2022/05/pulavar-kulanthai.html

https://tamilthugal.blogspot.com/2022/02/9-6-9th-tamil-online-test-nachiyar.html

https://tamilthugal.blogspot.com/2022/05/andal.html

11.ஆயத்தப்படுத்துதல்

          அழகிய இயற்கைக் காட்சி பற்றிக் கூறச் செய்தல்.

          ஆண்டாள் குறித்துக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

ஐவகை நிலங்களை நினைவூட்டுதல்.

தமிழர் அழகியலையும் பக்தியையும் அறிதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          இயற்கை பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          நிலங்களின் வகைகள் குறித்து விளக்குதல்.

இயற்கை வருணனைகள்  குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக இன்றைய இயற்கையைப் பற்றி உரைத்தல்.

ஆண்டாளின் தனிச்சிறப்புகள் குறித்து விளக்குதல். ஆண்டாளின் கனவுக்காட்சியை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பக்தியின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          அழகியலை மாணவர்களை அறியச் செய்தல்.

          தமிழர்களின்  பக்தி இலக்கியங்களை அறிதல்.

15.மதிப்பீடு

          LOT இராவணகாவியம் ............................. பாடல்களைக் கொண்டது.

          MOT – கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

HOT இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரி.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த இயற்கைக் காட்சியை வரைக.

ஆண்டாள் குறித்த தகவல்களைத் திரட்டுக.

தமிழ்த்துகள்

Blog Archive