கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 7 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.அணி என்ற சொல் உணர்த்தும் பொருள்

விடை – அழகு

2.கோடிட்ட இடங்களை நிரப்புக.

விடை –

அ.கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.

ஆ.தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு.

3.சரியா தவறா.

விடை –

அ.நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. சரி

ஆ.வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. சரி

4.குறளினைச் சீர்பிரித்து எழுதுக.

விடை –

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.

5.தொடரில் அமைத்து எழுதுக.

விடை –

அ.தக்கார் – நடுவுநிலைமை உடையவர்

நீதிபதி நடுவுநிலைமை உடையவராக இருக்கவேண்டும்.

ஆ.எள்ளற்க – இகழ்தல் கூடாது

நாம் எவரையும் இகழ்தல் கூடாது.

6.திருக்குறள் சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

விடை –

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து.

7.வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

   புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

குறளில் மாறி இடம்பெற்றுள்ள மரபுத்தொடர்

 விடை –

புலித்தோல் போர்த்திய பசு

8.உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

   களர்அனையர் கல்லா தவர்.

குறளில் பயின்றுவரும் எதுகைச் சொற்கள்

 விடை –

உளர்என்னும்

களர்அனையர்

9.சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்

   கோடாமை சான்றோருக்கு அணி.

குறளில் பயின்றுவந்துள்ள அணியைப் பொருளுடன் பொருத்தி எழுதுக.

 விடை –

இக்குறளில் உவமைஅணி பயின்றுவந்துள்ளது.

உவமை – துலாக்கோல்

உவமேயம் – சான்றோர்

உவமஉருபு - போல்

10.கதைக்குப் பொருத்தமான திருக்குறள்

விடை –

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

தமிழ்த்துகள்

Blog Archive