கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, June 19, 2020

நூறு ரூபாய், இருநூறு ரூபாய், முந்நூறு ரூபாய், நானூறு ரூபாய் - புத்திசாலிப் புலவரின் இரட்டுறமொழிதல் SILEDAI ‎

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். 
மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. 
மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. 
மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. 
மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார். 
புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். 
புலவர் : நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். 
அமரவே இடம் இல்லை, அதைச் சொன்னேன். 
உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 
முன்னால் 100தானே தருவேன் என்றீர்கள். 
முன், நூறு ரூபாய் என்று அதைச் சொன்னேன். 
300 ரூபாய் வந்தது. 
'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். 
உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். 
இதுதான் நடந்தது. 
மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.

தமிழ்த்துகள்

Blog Archive