கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

வைக்கோலுக்கும் யானைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI VAIKKOLUM YAANAIYUM

காளமேகப்புலவர் - KAALAMEGA PULAVAR
பாடல்
வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை யாம்.

விளக்கம்

வைக்கோலானது வாரிக் களத்தில் அடிக்கப்படும். 
பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாக புகுத்தப்படும். 
வைக்கோல் போரில் அது சிறந்து பொலிவுற்றிருக்கும்.

யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். 
பின்பு வந்து அதன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகும். 
போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும்

தமிழ்த்துகள்

Blog Archive