கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

வெற்றிலைக்கும் வேசைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI VETRILAIYUM VESAIYUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
கொள்ளுகையா னரிற் குளிக்கையான் மேலேறிக்
கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் – தெள்ளுபுகழ்ச்
செற்றலரை வென்ற திருமலைரா யன்வரையில்
வெற்றிலையும் வேசையாமே. 

விளக்கம்
வெற்றிலை – 
விற்போர் கையால் கொள்ளும் நீரால் குளிப்பாட்டப்படும். 
கொடிக்காலில் மேலே ஏறி வெற்றிலையைக் கிள்ளுவர். 
கவுளி கவுளியாக அடுக்கிக் கட்டி வைக்கப்படும்.

வேசை என்னும் விலைமகள் – 
வேசை கையால் தழுவிக்கொள்ளப்படுவாள். 
குளித்துவிட்டு உலாத்துவாள். 
அவள் மேல் ஏறிக்கொண்டு அவள் அழகு மேனியை ஆசையாகக் கிள்ளுவர்.

தமிழ்த்துகள்

Blog Archive