காளமேகப்புலவர் KAALAMEGA PULAVARபாடல்
சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானதோ-சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா நின்பாதம்
படித்தோர்க்கு மாறுதலை பார்.விளக்கம்சங்கரற்கும் ஆறுதலை - சிவபெருமானுக்குத் தலையிலே கங்கையென்னும் ஆறு உரியதாகும், சண்முகற்கும் ஆறுதலை - முருகப்பெருமானுக்கும் ஆறு தலைகள் உளவாகும், ஐங்கரற்கு மாறுதலை - ஐங்கரனாகிய பிள்ளையாருக்கு உடலோடு மாறுகொண்ட யானைத் தலையாய விளங்கும், சங்கைப் பிடித்தோர்க்கும் ஆறுதலை - சங்கத்தை ஏந்தியவரான திருமாலுக்கும் பிரளய வெள்ளம் உறைவிடமாயிருக்கும், பித்தா - பித்தனாகிய பரமனே! நின் பாதம் படித்தோர்க்கும் ஆறுதலை பார் - நின் திருவடிகளைப் போற்றியவரான என்போலும் சிவனடியார்க்கும் ஆறுதல் உண்டாகியிருக்கின்றது. இதனைக் காண்பாயாக!