கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை .... பாடலும் விளக்கமும்

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை
ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம்
பிடித்தோர்க்கு மாறுதலை பார்
விளக்கம்
சங்கரர்க்கும் ஆறு தலை | சண்முகர்க்கும் ஆறுதலை | ஐங்கரர்க்கும் மாறு தலை ஆனதே | சங்கைப் பிடித்தோர்க்கு மாறு தலை பித்தாநின் பாதம் பிடித்தோர்க்கு மாறுதலை பார் .
எல்லாருக்கும் ஆறு தலை என்று பாடியது.
சங்கரன் தலையில் கங்கை ஆறு உள்ளது.
சண்முகனுக்கு ஆறு தலைகள் உள்ளன.
ஐந்து கை கொண்ட பிள்ளையார்க்கு மாறுபட்ட யானைத்தலை உள்ளது.
சங்கைப் பிடித்த திருமாலுக்கும் பத்துப் பிறவிகளிலும் மாறுபட்ட தலை இருந்தது.
பித்தா! (சிவனே)
உன் திருவடிகளைப் பற்றிய அடியவர்களுக்கும் ஆறுதல் இருப்பதை நீயே பார்.

தமிழ்த்துகள்

Blog Archive