கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

கூத்தியாருக்கும் குரங்குக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI KOOTHIYARUM KURANKUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
ஓட்டங் கடியதா லுள்ளவரை மேவுதலால்
சேட்டை யெவரிடத்துஞ் செய்தலால் நாட்டமுடன்
காத்திரத்திற் குட்டியுறக் கட்டுதலாற் றெட்டுதலால்
கூத்தியர்க்கு நேராங் குரங்கு

விளக்கம்
கூத்தியார் என்னும் வைப்பாட்டி – 
கடியதாய் (விரைவாக) ஓடிவிடுவாள். 
கைப்பொருள் உள்ளவரை விரும்புவாள். 
எல்லாரிடத்திலும் காதல் சேட்டை செய்வாள். 
ஆசையுடன் காப்பாற்றும்போதே குட்டிவிடுவாள். 
கட்டிப்பிடித்துக் கையிலுள்ள பொருளைத் தெட்டி (தெற்றி)ப் பறித்துக்கொள்வாள்.

குரங்கு – 
விரைவாக ஓடும். 
தான் உள்ள வரையை (மலையை) விரும்பும். 
எவராயிருந்தாலும் சேட்டை செய்யும். 
விருப்பத்துடன் காக்கும்பொருட்டுத் தன் குட்டியைப் பற்றிக் கட்டிக்கொள்ளும். 
பிறரிடமுள்ள பொருளைத் தெட்டிப் பறித்துக்கொள்ளும்.

தமிழ்த்துகள்

Blog Archive