கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

கீரைப்பாத்திக்கும் குதிரைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI KEERAI PAATHIYUM KUTHIRAIYUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
கட்டி யடிக்கையாங் கான்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியா குமே.

விளக்கம்
வளமான கீரைப் பாத்தி – 
கீரை விதை தெளிக்கும்போது பாத்தியிலுள்ள மண்ணாலான கட்டிகள் அடித்து உடைக்கப்படும். 
வாய்க்காலில் மடை மாறித் தண்ணீர் பாயும். 
பாயும் மடையின் கரை வெட்டி மறிக்கப்படும். 
மேன்மை அதற்கு உண்டு. 
பாத்தியின் எல்லையில் நீர் முட்டியபின் பாத்தி-மடை திருப்பிவிடப்படும்.

குதிரையானது வண்டியில் கட்டி அடிக்கப்படும். 
முன்னங்கால் பின்னங்கால் என்று கால் மாறிப் பாயும். 
காலைத் தரையில் வெட்டிக் காட்டித் தன் மேன்மையைக் குதிரை விளக்கும். 
தடை வரும்போது திரும்பி ஓடும்.

தமிழ்த்துகள்

Blog Archive