கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

ஆமணக்குக்கும் யானைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI AAMANAKKUM YAANAIYUM

காளமேகப்புலவர்   - KAALAMEGA PULAVAR
பாடல்
முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு மால்யானை யாம்.

விளக்கம்

ஆமணக்குச் செடியில் ஆமணக்குக் கொட்டைமுத்து இருக்கும்.
(ஊன்றுகோல் போன்ற) தன் கொம்பை அசைக்கும். 
உள்ளே துளை உள்ள மூரித்தண்டு ஏந்தி வளரும். 
கொத்தாக இருக்கும் 
ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தித் தலையைச் சாய்க்கும்.

யானை முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். 
உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். 
கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும்.

தமிழ்த்துகள்

Blog Archive