கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI PAAMBUM ELUMICHAMPALAMUM SNAKE & LEMON

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்
தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்
விளக்கம்
பாம்பு பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். 
பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். 
அரி (காற்று) உண்ணும். 
அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். 
எரிச்சல் (சினம்) குணம் உடையது

எலுமிச்சம்பழம் பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். 
பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். 
அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். 
உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். 
சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.

தமிழ்த்துகள்

Blog Archive