கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, June 16, 2020

நீலகேசி NEELAKESI

நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். 

சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. 

தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. 

பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. 

எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. 

இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.

இந்நூல் கடவுள் வாழ்த்து தவிர 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது. 

இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.

  1. கடவுள் வாழ்த்தும் பதிகமும் - 9 பாடல்கள்
  2. தரும உரை - 140 பாடல்கள்
  3. குண்டலகேசி வாதம் - 82 பாடல்கள்
  4. அர்க்க சந்திர வாதம் - 35 பாடல்கள்
  5. மொக்கல வாதம் - 193 பாடல்கள்
  6. புத்த வாதம் - 192 பாடல்கள்
  7. ஆசீவக வாதம் - 71 பாடல்கள்
  8. சாங்கிய வாதம் - 53 பாடல்கள்
  9. வைசேடிக வாதம் - 41 பாடல்கள்
  10. வேத வாதம் - 30 பாடல்கள்
  11. பூத வாதம் - 41 பாடல்கள்

தமிழ்த்துகள்

Blog Archive