கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, June 19, 2020

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் ... இரட்டுறமொழிதல் SILEDAI KAAKKAI KARI SAMAITHU KARUVADU...

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் 

காக்கா கறி சமைச்சி,
கருவாடு  உண்பவர்களா சைவர்கள்.?

இங்குதான்தமிழ் விளையாடுகிறது!!!

இதன் அர்த்தத்தைக் கேளுங்கள் வியந்து போவீர்கள்.

காக்கை = கால் கை அளவு
கறி சமைத்து = காய்கறி சமைத்து
கரு வாடுமென்று= கரு என்பதான உயிர் வாடும் என்று
உண்பர் சைவர் = உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்!

இன்னும் விளக்கிக் கூறவேண்டுமானால்..

"சிவனை மட்டும் வழிபாடு செய்யும் 
சைவ சமயத்தைச் சேர்ந்த பக்தர்கள், 
ஒரு கை அளவிலான காய் கறிகளை எடுத்து  அதில் நான்கில் ஒரு பாகத்தை  மட்டுமே சமைத்து,
இந்த உடலில்உயிர் தங்கவேண்டும் என்பதற்காக வெறும்
கால் வயிறு மட்டுமே உண்டு காலத்தை ஓட்டுவார்கள்"
என்றுதெளிவு படுத்தலாம்.

இத்தகைய விரத வாழ்வினால், சிவனடியார்கள்...
எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள்.

இந்த நிலைதான் முக்திக்கு வழிகாட்டியான...
தவம், யோகம் போன்றவைகளை சிறப்பாகப் பயில முடியும் என்பது அவர்கள் பயின்றது!

தமிழ்த்துகள்

Blog Archive