கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

குதிரைக்கும் காவிரியாற்றுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI KUTHIRAIYUM KAAVIRIYAARUM HORSE & KAVIRI RIVER

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்
தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்
ஆடுபரி காவிரி யாமே.

விளக்கம்
குதிரை – 
ஓடும். 
நல்ல குதிரைக்கு அடையாளமான ‘சுழி’ சுத்தம் உண்டாகியிருக்கும். பகைவரை விரட்டியடிக்கும். 
தன்னை வளர்ப்பவனிடம் அன்பால் தலை சாய்க்கும்.

காவிரி ஆறு - 
நீராய் ஓடும். 
நீர்ச்சுழி இருக்கும். 
நீர் சுத்தம் ஆகும். 
தன்னைத் துன்னும் அலரைச் சாடும் (தன்னை அடையும் மலரை அடித்துக்கொண்டு ஓடும்). 
மக்கள் குளிப்பதற்காக விருப்பமுடன் அதன்மீது தலைசாய்ப்பர்

தமிழ்த்துகள்

Blog Archive