கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

வானவில்லுக்கும் விஷ்ணுவுக்கும் வெற்றிலைக்கும் VAANAVILLUM VISHNUVUM VETRILAIYUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
நீரிலுளவா னிறம் பச்சையாற் றிருவால்
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் – சாருமனுப்
பல்வினையை மாற்றுதலாற் பாரீர் பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை
விளக்கம்
வானவில் – 
நீரினால் உண்டாகும். 
நிறம் பச்சையாக இருக்கும். 
‘திருவில்’ எனப் போற்றப்படும். 
உலகில் பகைமையை ஒழித்து ஒற்றுமையுடன் வாழச் செய்யும். அதனைச் சார்ந்த மனு என்னும் அரசனின் வல்வினையைப் போக்கிற்று.

விஷ்ணு – 
பாற்கடல் நீரில் இருக்கிறான். 
பச்சைநிறம் கொண்டவன். 
பாரதப் போரில் பகைமையைத் தீர்த்து வைத்தான். 
மனு என்னும் அரசனின் வல்வினையை மாற்றினான்.

வெற்றிலை – 
நீரில் முளைத்து வளரும். 
பச்சைநிறம் கொண்டது. 
திரு என்னும் மங்கலச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்படும். 
பகை நீங்கி உறவாடுவதன் அடையாளச் சின்னமாக வெற்றிலைப் பாக்கு வைக்கப்படும். 
வினை தீர்க்கும் மருந்தாக விளங்கும்

தமிழ்த்துகள்

Blog Archive