கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

முகுந்தனுக்கும் முறத்துக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI MUGUNTHANUM MURAMUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
வல்லரியாய் உற்றிடலான் மாதர்கையில் பற்றிடலான்
சொல்லரிய மாப்புடைக்கத் தோன்றுதலால் – வல்லோர்
அகந்தனிலே வாழ்தலா லன்றுல களந்த
முகுந்தனுமே யகும் முறம்.
விளக்கம்
உலகளந்த பெருமாளாகிய முகுந்தன் வலிமை மிக்க சிங்கமாகத் தோன்றினான். 
குழந்தை கண்ணனாக மாதர் கையில் பிடிபட்டான். 
சொல்வதற்கு அரிய பெருமை மிக்க மா என்னும் திருமகள் தன் நெஞ்சில் புடைத்திருக்கத் தோன்றுகிறான். 
நெஞ்சுரம் மிக்கவர் செஞ்சகத்தில் வாழ்கிறான்.

முறம் வலிமை மிக்க மூங்கில் என்னும் அரியால் பின்னப்பட்டது. 
மகளிர் புடைப்பதற்காகக் கையில் பற்றுகின்றனர். 
சொல் என்னும் நெல்லு மாவைப் புடைப்பதற்காகத் தோன்றி வந்துள்ளது. 
வலிமை மிக்கார் வீடுகளில் வாழ்கிறது.

தமிழ்த்துகள்

Blog Archive