கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் அணிகள் 10TH TAMIL ANI ILAKKANAM

 

பத்தாம் வகுப்பு      தமிழ்       அணிகள்

தற்குறிப்பேற்ற அணி

அணி இலக்கணம்

தன்+ குறிப்பு +ஏற்றம் +அணி =தற்குறிப்பேற்ற அணி

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

சான்று-                                                தமிழ்த்துகள்

      போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

-சிலப்பதிகாரம் (இளங்கோவடிகள்)

சான்று விளக்கம்

கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் என தடுப்பது போல் கை காட்டியது.

அணிப் பொருத்தம்

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற போது மதில் மேலிருந்த கொடிகள் காற்றால் இயற்கையாக அசைந்தது. ஆனால் இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி கொடிகள் கையசைத்து மதுரைக்கு வர வேண்டாம் என தெரிவிப்பது போல அசைவதாகத் தன் குறிப்பை கொடியின் மீது ஏற்றிக் கூறுவதால் இப்பாடல் தற்குறிப்பேற்றணிக்குப் பொருத்தமாகும்.

 இயல்பான நிகழ்வு - காற்றில் கொடிகள் அசைவது

 ஏற்றி கூறியது- கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வர வேண்டாம் என எச்சரிப்பது.

தீவக அணி

அணி இலக்கணம்

தீவகம் +அணி                                         தமிழ்த்துகள்

       தீவகம்=விளக்கு

ஒரு அறையில் ஒரு இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் செய்யுளின் பல இடங்களுக்குச் சென்று பொருந்தி பொருளை விளக்குவது தீவக அணி எனப்படும்.

சான்று-

       சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி- பாய்ந்து

       திசை அனைத்தும், வீரச்சிலைபொழிந்த அம்பும்,

மிசை அனைத்தும் புள் குலமும் வீழ்ந்து.

பாடலின் பொருள்-

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன. அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன. குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன. வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன. குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.                                 தமிழ்த்துகள்

அணிப் பொருத்தம்-

இப்பாடலில்  சேந்தன (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள் ,அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்துடன் பொருந்தி பொருள் தருவதால் இப்பாடல் தீவக அணிக்குப் பொருத்தமாகும்.

 

நிரல்நிறை அணி

அணி இலக்கணம்-

நிரல் +நிறை +அணி

நிரல்= வரிசை ;நிறை =நிறுத்துதல்

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

சான்று-

 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை                 தமிழ்த்துகள்

 பண்பும் பயனும் அது

-திருவள்ளுவர்  (திருக்குறள்).

சான்று விளக்கம்-

இல்வாழ்க்கை என்பது அன்பும் அறமும் உடையதாக விளங்கும் ஆனால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

அணிப் பொருத்தம்-

திருக்குறளில் அன்பும் அறனும் என்று சொற்களை வரிசையாக நிறுத்தி பண்பும் பயனும் என்று சொற்களை முறைப்படி உள்ளமையால் இப்பாடல் நிரல்நிறை அணிக்கு பொருத்தமாகும்.

தன்மையணி

அணி இலக்கணம்

தன்மை +அணி.

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் அதன் இயல்புத் தன்மையோடு அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும்.                                               தமிழ்த்துகள்

சான்று-

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்… -சிலப்பதிகாரம்.

சான்று விளக்கம்-

உடம்பு முழுக்கத் தூசியும் விரிந்து கருமையான தலைமுடியும் கையில் ஒற்றை சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலே வைகை நதி பாயும் கூடல்நகர் அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான்.

அணிப் பொருத்தம்-

கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இப்பாடல் தன்மை நவிற்சி அணிக்குப் பொருத்தமாகும்.

உவமை அணி

அணி இலக்கணம்-

உவமை+ அணி                                             தமிழ்த்துகள்

தெரிந்து ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமை எனப்படும். அவ்வாறு விளக்கும் பொழுது போல, போன்ற உவம உருபுகள் வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.

சான்று-

            வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

              கோலொடு நின்றான் இரவு.

-திருவள்ளுவர் (திருக்குறள்).

சான்று விளக்கம்-

ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது.

அணிப் பொருத்தம்-

உவமை-ஆயுதம் காட்டி வழிப்பறி செய்வது

உவமேயம் -ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது

உவம உருபு- போலும்                            தமிழ்த்துகள்

இப்பாடலில் போலும் எனும் உவம உருபு உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் வெளிப்படையாக வந்துள்ளதால் இப்பாடல் உவமை அணிக்குப் பொருத்தமாகும்.

எடுத்துக்காட்டு உவமையணி

அணி இலக்கணம்-

தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமையாகும். அவ்வாறு விளக்கும் பொழுது உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையே உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி எனப்படும்.                     தமிழ்த்துகள்

சான்று-

       பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்

.-திருக்குறள் (திருவள்ளுவர்)

சான்று விளக்கம்-

 பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் என்ன பயன்? அதுபோலவே இரக்கம் இல்லா விட்டால் கண்களால் என்ன பயன்?                                  தமிழ்த்துகள்

அணிப் பொருத்தம்

      உவமை- பாடலோடு பொருந்தாத இசை பயனில்லை

உவமேயம்- இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் பயனில்லை.

உவம உருபு- போல (மறைந்து வந்துள்ளது)

இப்பாடலில் உவமைக்கும் உவமேயதிற்கும் இடையே உவம உருபு மறைந்து வந்துள்ளதால் இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணிக்குப் பொருத்தமாகும்.

சொற் பின்வருநிலையணி

அணி இலக்கணம்

சொல் + பின்வருநிலை +அணி

ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது சொற் பின்வருநிலையணி ஆகும்                 தமிழ்த்துகள்

சான்று-

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்

-திருக்குறள் (திருவள்ளுவர்)

சான்று விளக்கம்-

       ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையராகச் செய்வது செல்வம். அது இல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை. 

 அணிப் பொருத்தம்

மீண்டும் மீண்டும் வந்த சொல் - பொருள்             

இப்பாடலில் பொருள் எனும் சொல் வெவ்வேறு பொருளைத் தந்துள்ளதால் இப்பாடல் சொற் பின்வருநிலையணிக்குப் பொருத்தமாகும்.

தமிழ்த்துகள்

Blog Archive