கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, May 27, 2021

விசும்பின் துளியும் பசும்புல் தலையும் தமிழ்க் கட்டுரை VISUMPIN THULIYUM PASUMPUL THALAIYUM TAMIL KATTURAI

 

விசும்பின் துளியும் பசும்புல் தலையும்

முன்னுரை                           

நீரின்ற மையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு - என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொய்யாமொழிப் புலவர் கூறியுள்ளார். இயற்கையில் கிடைக்கும் தூய நீரான மழை நீரைச் சேமிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். எதிர்காலத் தேவைக்காகச் சேமிக்க வேண்டியது பணம் மட்டுமல்ல. மழைநீர் தான் முதலிடம் பெறுகிறது. மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

விசும்பின் துளியும் பசும்புல் தலையும்

மாரியல்லது காரியமில்லை என்பது பழமொழி. உண்பதற்கு உணவாகவும் உணவைச் மைப்பதற்காகவும் உணவுப்பொருள்கள் விளைவதற்குக் காரணமாகவும் இருப்பது மழை நீரே. அப்படிப்பட்டழைநீர் பொழியாது போனால் இப்புவியில் புல் பூண்டுகளும் இல்லாமல் போகும்.        WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது என்கிறார் தெய்வப்புலவர். உழுது பயிர் விளைக்கும் உழவர்க்கு நீரே முதன்மையானது. அத்தகைய மழை நீரை ஏரி, குளங்கள், அணைக்கட்டுகளில் தேக்கிவைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்தி வருகிறோம் நாம்.

பசுமையைக் காப்போம்          WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

பனி மூடிய மலை முகடுகளும் வற்றாத ஆறுகளும் கொண்டு வளம் கொழிப்பவள் இந்தியத்தாய். அவளது மேனியில் போர்த்தப்பட்டிருக்கும் பசுமைப் பட்டாடையில் மாசு காரணமாய்ப் பொத்தல்கள் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தொழிற்சாலைகளும், இருசக்கர, நான்கு சக்கர வண்டிப் புகைகளும் மண்டிப் போனால் உயிர் வளியில் ரிளி கலக்கும். அது நம் உயிருக்கே உலை வைக்கும். தொழிற்சாலைப் பகுதிகளில் கந்தகம், நைட்ரஜன் சேர்க்கையால் மாசு ஏற்படுகிறது. இதனால் இயற்கைச்சூழல் பாதிக்கும். மனித வளம் அழியும்.

காற்று மாசு

நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் இவையாவும் இருப்பதாலேயே புவிக்கு உயிர்க்கோளம் என்று பெயர். இல்லாது போனால் ஏனைய கோள்கள் போலவே மனிதர்கள் இல்லாத மயானம் ஆகிவிடும். உயிர் வளியில் கரியமிலவாயு கலக்காமல் தடுக்க வேண்டும்.டிகட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். பெட்ரோலியத்தால் அதிக காற்று மாசு ஏற்படுகிறது. எனவே சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். பசுமை இல்ல விளைவு காரணமாக அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் உருகும் அபாயம் உள்ளது. புவி வெப்பமயமாதலை நம்மால் முடிந்தவரை தடுத்து காற்று மாசு ஏற்படாமல் காக்க வேண்டும். ஓசோன் படலத்தில் ஓட்டை விழுமானால் கதிரவனின் புற ஊதாக் கதிர்கள் நம் உடலைத் துளைத்துப் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.

மழைநீர் உயிர்நீர்          WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

நாம் வாழும் பூமியில் 79 விழுக்காடு தண்ணீரே உள்ளது. இதில் 97.5 விழுக்காடு கடல் நீர் தான். மீதமுள்ள 2.5 விழுக்காடு மட்டுமே தண்ணீர். அதிலும் மூன்றில் ஒரு பங்கு பனிக்கட்டிகளாஉள்ளது. உலகின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி தற்போது 600 கோடியைத் தாண்டிவிட்டது. குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. மரங்கள் மழை தரும் ரங்கள் என்பதை உணர்ந்து மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும். தண்ணீர்ச் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை உணரவேண்டும்.

முடிவுரை                              WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல்லுயரும்

நெல்லுயரக் குடி உயரும்

குடி உயரக் கோன் உயரும் என்றார் வைப்பாட்டி. மழைநீர் சேமிப்பை ஒவ்வொரு வீட்டிலும் செயல்படுத்த வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதிக்கும் நெகிழிப் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். வளிமண்டலத்தில் கரிளி கலவாமையை உறுதி செய்ய வேண்டும். உயிர்க்கோளமாம் புவியை நாம் அட்சய பாத்திரமாகவோ அல்லது பிச்சைப் பாத்திரமாகவோ வைத்திருப்பது நம் கைகளில்தான் உள்ளது. சிந்திப்போம் ! செயல்படுவோம் !        WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தமிழ்த்துகள்

Blog Archive