கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, May 27, 2021

மாணவர்கள் பாடங்கேட்கும் முறை நன்னூல் பாடலும் விளக்கமும் MANAVARKAL PAADAM KETKUM MURAI NANNOOL SONG

 கோடல் மரபே கூறும் காலைப்

பொழுதொடு சென்று வழிபடல் முனியான்

குணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து

இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்

பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்

சித்திரப் பாவையின் அத்தக வடங்கிச்

செவிவா யாக நெஞ்சுகளன் ஆகக்

கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்

போவெனப் போதல் என்மனார் புலவர். 

நன்னூல் 40


மாணவர்கள் பாடங்கேட்கும் முறை என்ன என்பதை நன்னூல் பின்வருமாறு விளக்குகிறது.

  1. ஆசிரியர் குறித்துச் சொன்ன நேரத்தில் மாணவன் அவ்விடம் சென்று முதலில் அவரை வழிபடவேண்டும்.
  2. வெறுப்பில்லாதவனாய் ஆசிரியரின் இயல்பறிந்து நடந்துகொள்ள வேண்டும்.
  3. ஆசிரியரின் குறிப்புணர்ந்து மாணவன் செயல்படவேண்டும்.
  4. இவ்விடம் அமர்ந்துகொள் என்று அவர் கூறியபிறகே அமரவேண்டும்.
  5. படி என்று அவர் சொல்லியபிறகே பாடத்தைப் படித்தல் வேண்டும்.
  6. தாகம் கொண்டவன் தண்ணீரைக் கண்டதும் எப்படி ஆர்வத்துடன் பருகுவானோ அப்படிப் பாடத்தில் ஆர்வம் மிகுந்தவனாக மாணவன் இருக்கவேண்டும்.
  7. சித்திரப்பாவை போல ஆசிரியர்முன் அடக்கத்துடன் இருக்கவேண்டும்.
  8. ஆசிரியர் சொல்லும் பாடம் கேட்கும்போது மாணவனுக்கு காது வாயாகவும் மனம் வயிறாகவும் இருக்கவேண்டும்.
  9. முதல்நாள் ஆசிரியரிடம் கேட்டவற்றில் கொண்டுள்ள ஐயங்களை மீண்டும் கேட்டுத் தெளியவேண்டும்.
  10. பலமுறை கேட்டுத் தெளிந்தவற்றை மனத்தில் இருத்த வேண்டும்.
  11. போகலாம் என ஆசிரியர் சொல்லியபிறகே வகுப்பு முடிந்து மாணவன் போகவேண்டும்.

தமிழ்த்துகள்

Blog Archive