கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 26, 2021

நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் LETTER TO PUBLISHER

 

.

நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்

ம.கபிலன்,

5, வள்ளுவர் தெரு,

சென்னை.

பெறுநர்

ஆசிரியர்,

தினச்சுடர் நாளிதழ்,

சென்னை.

மதிப்பிற்குரிய அய்யா,

பொருள் - பொங்கல் மலரில் கட்டுரை வெளியிடுதல் சார்பாக...

வணக்கம். நான் சென்னை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். தங்கள் நாளிதழில் பொங்கல் மலருக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படும் என்ற செய்தியினைப் படித்தேன். உழவர்களுக்கு நன்றி தெரிவித்து நாம் கொண்டாடும் விழாவே பொங்கல். உழவர்களின் பெருமையையும் உழவுத் தொழிலுக்கு நாம் செய்யவேண்டிய மரியாதையையும் தொகுத்து கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற தலைப்பில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளேன். தங்கள் நாளிதழின் பொங்கல் மலரில் இக்கட்டுரையை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இக்கடிதத்துடன் என் கட்டுரையை இணைத்துள்ளேன். நன்றி.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

      ம.கபிலன்.

இடம் – சென்னை,

நாள் – 08.01.2020.

உறைமேல் முகவரி

பெறுநர்

ஆசிரியர்,

தினச்சுடர் நாளிதழ்,

சென்னை – 8.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தமிழ்த்துகள்

Blog Archive