கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, May 27, 2021

போட்டியில் வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்து மடல் WISHING LETTER TO FRIEND FOR WINNING COMPETITION

 

வாழ்த்து மடல்

    7, பாரதியார் தெரு,     

       மதுரை.

                                                             03-07-2022.

அன்புள்ள நண்பா,

நானும் என் பெற்றோரும் இங்கே நலமாக இருக்கிறோம். அதுபோல் அங்கு நீயும் உன் பெற்றோரும் நலமாக இருக்கிறீர்களா ? நான் இங்கு நன்றாகப் படிக்கிறேன். நீயும் அங்கு நன்றாகப் படிப்பாய் என்று எண்ணுகிறேன்.

மாநில அளவில் நடைபெற்ற ” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று நீ முதல் பரிசு பெற்றாய் என்ற செய்தியை நாளிதழ் மூலம் அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே நீ கட்டுரைப் போட்டிகள் பலவற்றில் வெற்றி பெற்று பரிசு பெற்றுள்ளாய். உன் அழகான கையெழுத்தும் கருத்துச் செறிவும் நூலகப்பயன்பாடும் உறுதியாக உனக்கு ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளதற்கு என்னுடைய பாராட்டுகள். மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு நீ முதல் பரிசு பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

என் மடல் கண்டு நீ அவசியம் பதில் எழுத வேண்டும். உன் பதில் மடலைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,

     உன் அன்புள்ள தோழன்,

    அ.முகிலன்.

உறை மேல் முகவரி –

திரு.ப.எழிலன்,

5, கம்பர் தெரு,

சென்னை.

 

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive